இந்தியாவில் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையான சியோமி சாதனம்

சியோமியின் Mi பேண்ட் 3 சாதனம் இந்தியாவில் அறிமுகமானது முதல் இதுவரை சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. #MiBand3
இந்தியாவில் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையான சியோமி சாதனம்
Published on

சியோமியின் Mi பேண்ட் சந்தையில் தற்சமயம் கிடைப்பதில் விலை குறைந்த ஃபிட்னஸ் சாதனமாக இருக்கிறது. இதுதவிர Mi பேண்ட் 3 இந்திய விற்பனையில் புதிய மைல்கல் சாதனை படைத்திருக்கிறது. 

இந்தியாவில் Mi பேண்ட் 3 சாதனத்தை சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. அன்று முதல் இதுவரை Mi பேண்ட் 3 சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. மேலும் அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் இந்தியாவின் முன்னணி பிராண்டாகி இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது.

சியோமி நிறுவனம் Mi பேண்ட் 3 விற்பனை மைல்கல் அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்திருக்கிறது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் Mi பேண்ட் 3 விற்பனை செய்யப்படுகிறது. இதில் 0.78 இன்ச் OLED டிஸ்ப்ளே, ஸ்வைப் ஜெஸ்ட்யூர் வசதி, 110 எம்.ஏ.ஹெச். லி-அயன் பேட்டரி வழங்கப்படுகிறது.

ப்ளூடூத் 4.2 கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் Mi பேண்ட் 3 மாடலில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. Mi பேண்ட் 3 சாதனம் கொண்டு ஆண்ட்ராய்டு 4.4 அல்லது ஐ.ஓ.எஸ். 9.0 இயங்குதளம் அல்லது அதன் பின் வெளியான இயங்குதளங்களில் பயன்படுத்தலாம்.

கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வரையிலான காலக்கட்டத்தில் அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் உலகளவில் இரண்டாவது பெரிய நிறுவனமாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com