வால்மார்ட் இந்தியாவை கைப்பற்றிய ப்ளிப்கார்ட்

ப்ளிப்கார்ட் நிறுவனம் வால்மார்ட் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை வாங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
ப்ளிப்கார்ட்
ப்ளிப்கார்ட்
Published on

ப்ளிப்கார்ட் நிறுவனம் வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்கி உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ப்ளிப்கார்ட் புதிதாக டிஜிட்டல் விற்பனையகம் ஒன்றை துவங்கி மளிகை கடை, சிறு மற்றும் குறு தொழில் செய்வோரை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

ப்ளிப்கார்ட் புதிய முடிவு அமேசான் மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜியோமார்ட் சேவைக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் மொத்த விற்பனையகம் தனது பணிகளை ஆகஸ்ட் மாதத்தில் துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதில் முதற்கட்டமாக மளிகை மற்றும் அழகுசாதன பொருட்களை விற்பனை செய்யப்பட இருக்கின்றன. புதிய மொத்த விற்பனையக திட்டத்திற்கு தலைமை பொறுப்பை ப்ளிப்கார்ட் நிறுவன மூத்த துணை தலைவர் ஆதார்ஷ் மேனன் ஏற்கிறார். இவருடன் வால்மார்ட் இந்தியா தலைமை செயல் அதிகாரி சமீர் அகர்வால் தொடர்ந்து நிறுவனத்தில் இருப்பார். 

வால்மார்ட் இந்தியா வியாபாரத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் ப்ளிப்கார்ட் குழுமத்திற்கு மாற்றப்படுவர். இந்தியாவின் விலை குறைந்த பிராண்டாக இருக்கும் வால்மார்ட் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றும் என ப்ளிப்கார்ட் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com