இந்தியாவில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில், முஸ்லீம்கள் சாலையில் நமாஸ் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் புகைப்படம்
வைரல் புகைப்படம்
Published on

சாலையின் நடுவே பலர் நமாஸ் செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

'வெள்ளி கிழமை பிரார்த்தனை செய்ய இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடுக்கிறார்கள். இது பிரார்த்தனை போன்று தெரியவில்லை, மற்றவர்களுக்கு எண்ணிக்கையை எடுத்துக்காட்டுவது போன்று இருக்கிறது. பிரார்த்தனையை வேறு இடங்களில் செய்ய கேட்டுக் கொண்டால், அதனை பாரபட்சம் காட்டுவதாக விமர்சிப்பர்,' எனும் தலைப்பில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.

வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது 2020 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இதன் உண்மை புகைப்படம் ஜனவரி 2020 வாக்கில் எடுக்கப்பட்டது ஆகும். இது உலகின் இரண்டாவது பெரிய ஜூம்மா பிரார்த்தனை கூட்டம் ஆகும்.

வங்கதேசத்தில் ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் மிகப்பெரும் முஸ்லீம்களின் கூட்டம் ஆகும். இந்த பிரார்த்தனை கூட்டம் டாக்கா நகரை ஒட்டியுள்ள டுராக் ஆற்றங்கரையில் 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் நடைபெறும். அந்த வகையில், வைரல் புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்படவில்லை என தெளிவாகிவிட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com