என் மலர்
நீங்கள் தேடியது "SN Subrahmanyan"
- ஞாயிற்றுக்கிழமை பணியாளர்கள் வீட்டில் இருப்பதால் என்ன லாபம் அடைந்தார்கள்?.
- வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள்.
இந்தியாவில் அரசு நிறுவனங்களில் சனி, ஞாயிறு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஐ.டி. நிறுவனங்களிலும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை. தனியார் நிறுவனங்களில் ஞாயிறு மட்டும் விடுமுறையாகும்.
உலகளாவிய போட்டியால் ஐ.டி. உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தங்களுடைய செயல்திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் ஊழியர்களை குறைத்து அதிக நேரம் வேலை பார்க்க வைக்கலாமா என ஐ.டி. நிறுவனங்கள் எண்ணுகின்றன.

இன்போசிஸ் இணை-நிறுவனர் நாராயண மூர்த்தி வாரத்திற்கு 70 மணி நேரம் வேலைப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு எதிர்மறையான கருத்துகள் அதிக அளவில் வந்தன. சாதகமான கருத்துகளும் வந்தனர்.
கடந்த வாரம் அதானி வாரத்திற்கு 70 மணி நேர வேலை குறித்து பேசும்போது "உங்கள் வேலை வாழ்க்கை- சமநிலையை என்மீது திணிக்கக்கூடாது, எனது வேலை- வாழ்க்கை சமநிலையை உங்கள் மீது திணிக்க மாட்டேன். ஒருவர் தனது குடும்பத்துடன் 4 மணி நேரம் செலவு செய்வதில் மகிழ்ச்சி காண்பார், மற்றொருவர் 8 மணி நேரம் அவர்களுடன் நேரம் செலவு செய்வதில் மகிழ்ச்சி காண்பார். அது அவர்களின் சமநிலை.

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால், நீங்கள் குடும்பத்துடன் 8 மணி நேரம் செலவு செய்கிறீர்கள் என்பதால் மட்டுமே அது நடக்காமல் இருக்கப்போவதில்லை. மேலும் உங்கள் குழந்தைகளும், உங்களுக்கு குடும்ப மற்றும் வேலைக்கு அப்பால் ஒரு உலகம் இல்லை என்று அறிந்து அதையே பின்பற்றும். உங்களுக்கு பிடித்ததை செய்யும் போது வேலை வாழ்க்கை தானாகவே சமநிலையில் இருக்கும். சிலருக்கு அதிகம் பிடித்தது குடும்பமாக இருக்கும், சிலருக்கு வேலை அதிகம் பிடித்திருக்கும். இதை தாண்டி ஒரு உலகம் நமக்கு இல்லை. யாரும் இங்கு நிரந்தரமாக வரவில்லை. இதை ஒருவர் அறிந்துகொண்டால் வாழ்க்கை ரொம்ப சிம்பிள்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் L&T சேர்மன் எஸ்.என். சுப்ரமணியன் 90 மணி நேரம் வேலைப் பார்க்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை கூட போட்டித் தன்மையுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
L&T நிறுவனம் ஏன் சனிக்கிழமை தனது பணியாளர்களை வேலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டது குறித்து கேட்ட கேள்விக்கு எஸ்.என். சுப்ரமணியன் கூறியதாவது:-
உங்களை (பயணியாளர்கள்) ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைப்பார்க்க வைக்க என்னால் முடியவில்லை என்று வர்த்தப்படுகிறேன். என்னால் ஞாயிற்றுக்கிழமை உங்களை வேலைப்பார்க்க வைக்க முடியும் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால், நான் ஞாயிற்றக்கிழமைகளில் வேலைப் பார்க்கிறேன்.
ஞாயிற்றுக்கிழமை பணியாளர்கள் வீட்டில் இருப்பதால் என்ன லாபம் அடைந்தார்கள்?. வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். உங்களுடைய மனைவியை எவ்வளவு நேரம் வெறித்து பார்க்க முடியும். எவ்வளவு நேரம் மனைவி கணவனின் முகத்தை வெறித்து பார்க்க முடியும்? அலுவலகம் சென்று வேலையை தொடங்குங்கள்.
சீன மக்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலைப் பார்க்கிறார்கள். அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணி நேரம் மட்டுமே வேலைப் பார்க்கிறார்கள். உலகின் டாப் இடத்தில் வர வேண்டுமேன்றால், வாரத்திற்கு நீங்கள் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.
இவ்வாறு எஸ்.என். சுப்ரமணியன் தெரிவித்தார்.
இதற்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறா்கள்.
- ஞாயிற்றுக்கிழமை பணியாளர்கள் வீட்டில் இருப்பதால் என்ன லாபம் அடைந்தார்கள்?.
- வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். உங்களுடைய மனைவியை எவ்வளவு நேரம் வெறித்து பார்க்க முடியும்.
L&T சேர்மன் எஸ்.என். சுப்ரமணியன் "உங்களை (பயணியாளர்கள்) ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைப்பார்க்க வைக்க என்னால் முடியவில்லை என்று வர்த்தப்படுகிறேன். என்னால் ஞாயிற்றுக்கிழமை உங்களை வேலைப்பார்க்க வைக்க முடியும் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால், நான் ஞாயிற்றக்கிழமைகளில் வேலைப் பார்க்கிறேன்.
ஞாயிற்றுக்கிழமை பணியாளர்கள் வீட்டில் இருப்பதால் என்ன லாபம் அடைந்தார்கள்?. வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். உங்களுடைய மனைவியை எவ்வளவு நேரம் வெறித்து பார்க்க முடியும். எவ்வளவு நேரம் மனைவி கணவனின் முகத்தை வெறித்து பார்க்க முடியும்? அலுவலகம் சென்று வேலையை தொடங்குங்கள்.
சீன மக்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலைப் பார்க்கிறார்கள். அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணி நேரம் மட்டுமே வேலைப் பார்க்கிறார்கள். உலகின் டாப் இடத்தில் வர வேண்டுமேன்றால், வாரத்திற்கு நீங்கள் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கருத்து தெரிவித்துள்ளார் #MentalHealthMatters என்பதை பதிவிட்டு "இவ்வளவு மூத்த பதவிகளில் இருப்பவர்கள் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதைப் பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அலெக்ஜாண்டர் தனது கைகளை சவபெட்டிக்கு வெளியே விரித்து வைக்க ஏன் சொன்னார் தெரியுமா?
- லாபவெறியை முறித்து உங்களையும் மனித சுபாவத்திற்கு பக்கத்தில் கொண்டுவரத்தான் உழைப்பாளிகளின் உரிமையை இந்த உலகம் போற்றி பாதுகாக்கிறது.
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
வாரத்தில் 90 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டுமென எல்&டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பேசியுள்ளார்.
தொழிலாளர்கள் 40 மணி நேரம் வேலை செய்தே சுப்பிரமணியத்தின் வருட சம்பளம் 51 கோடி. முந்தைய வருடத்தை விட 43 சதவிகித உயர்வு.
தான் மேலும் லாபமடைய தொழிலாளர்கள் 90 மணி நேரம் உழையுங்கள் என்கிறார்.
அலெக்ஜாண்டர் தனது கைகளை சவபெட்டிக்கு வெளியே விரித்து வைக்க ஏன் சொன்னார் தெரியுமா?
சுப்பிரமணியன்கள் தொடர்ந்து வருவார்கள் என்பதால் தான்.
தொழிலாளி 8 மணி நேரத்தை சட்ட உரிமை ஆக்கியது ஏன் தெரியுமா?
இது போன்ற அபத்தமான போதனைகளை நிரந்தரமாக சவப்பெட்டியில் அறையத்தான்.
நீங்கள் செல்வம் பெருக்க தொழிலாளர்களின் இணையர்களின் முகங்களை கொச்சைப்படுத்தும் துணிவை உங்களுக்கு எந்த லாபவெறி கொடுத்ததோ, அந்த லாபவெறியை முறித்து உங்களையும் மனித சுபாவத்திற்கு பக்கத்தில் கொண்டுவரத்தான் உழைப்பாளிகளின் உரிமையை இந்த உலகம் போற்றி பாதுகாக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
- நான் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பணியாற்றுகிறேன் என்றார்.
- L&T செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
பணி நேரம் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்து L&T நிறுவன தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன் பேசிய வீடியோ ஒன்று புயலை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட அந்த வீடியோவில் அவர், "ஒவ்வொருத்தரும் 90 மணி நேரம் உழைக்க வேண்டும். நான் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பணியாற்றுகிறேன்," என்று கூறினார்.
ஏற்கனவே இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, "இந்தியர்கள் 70 மணி நேரம் பணியாற்ற வேண்டும்," என்று கூறியது பேசு பொருளானது. இந்த வரிசையில், தற்போது L&T தலைவர் 90 மணி நேரம் பணியாற்றுவது குறித்து தெரிவித்த கருத்துக்கு பலரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இந்த நிலையில், L&T தலைவர் கூறிய கருத்துக்கு, அந்நிறுவன செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய L&T செய்தி தொடர்பாளர், "L&T நிறுவனத்தில், தேசத்தை கட்டியெழுப்புவதே எங்கள் முக்கிய நோக்கம் ஆகும். கடந்த எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக, இந்தியாவின் உள்கட்டமைப்பு, தொழில்கள் மற்றும் தொழில்நுட்ப திறன்களை நாங்கள் வடிவமைத்து வருகிறோம்."
"இது இந்தியாவின் தசாப்தம் என்று நாங்கள் நம்புகிறோம், முன்னேற்றத்தை இயக்கவும், வளர்ந்த நாடாக மாறுவதற்கான எங்கள் பகிரப்பட்ட பார்வையை உணரவும் கூட்டு அர்ப்பணிப்பு மற்றும் முயற்சி தேவைப்படும் நேரம் இது."
"எங்கள் L&T நிறுவன தலைவரின் கருத்துக்கள் இந்த பெரிய லட்சியத்தை பிரதிபலிக்கின்றன. அசாதாரண விளைவுகளுக்கு அசாதாரண முயற்சி தேவை என்பதை வலியுறுத்துகின்றன. L&T நிறுவனத்தில் ஆர்வம், நோக்கம் மற்றும் செயல்திறன் நம்மை முன்னோக்கி நகர்த்தும் ஒரு கலாச்சாரத்தை வளர்ப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்று தெரிவித்தார்.
- வருடத்துக்கு ரூ. 51 கோடி, அதாவது, எல்&டி ஊழியர்களை விட 535 அதிகம் சம்பளம் வாங்கும் சுப்ரமணியன் இதை சொல்லலாமா?
- வேலை நேரத்தின் அளவை விட, வேலையின் தரத்தில் தான் கவனம் செலுத்த வேண்டும்.
லார்சன் அண்ட் டூப்ரோ (எல்&டி) தலைவர் எஸ்என் சுப்ரமணியன், ஊழியர்கள் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
எவ்வளவு நேரம் தான் வீட்டிலேயே உட்கார்ந்து மனைவியின் முகத்தை பார்த்துக்கொண்டிருப்பீர்கள் என்று அவர் பேசியது பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
வருடத்துக்கு ரூ. 51 கோடி, அதாவது, எல்&டி ஊழியர்களை விட 535 அதிகம் சம்பளம் வாங்கும் சுப்ரமணியன் இதை சொல்லலாமா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 70 ,மணி நேரம் வேலை பார்க்க சொன்ன இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கோஷ்டியில் தற்போது சுப்ரமணியன் இணைந்துள்ளார்.
இந்நிலையில் சுப்பிரமணியன் கருத்துக்கு பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பதிலடி கொடுத்துள்ளார்.

சனிக்கிழமையன்று ஒரு ஊடக நிகழ்வில் பேசிய மஹிந்திரா, நான் சமூக ஊடகத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறேன் என்று பலர் கேட்கின்றனர்.
நான் எக்ஸ் தளத்தில் நேரம் செலவிடுகிறேன், ஆனால் அது நான் தனிமையில் இருப்பதால் அல்ல. எனது மனைவி அற்புதமானவர், அவரை பார்த்துக்கொண்டே இருப்பதை நான் விரும்புகிறேன். எனவே நான் நண்பர்களை உருவாக்க சமூக ஊடகங்களை பயன்படுத்தவில்லை, தொழில் நிமித்தமாகவே அதை ஒரு கருவியாக பயன்படுத்துகிறேன்.
90 மணிநேர வேலை வார விவாதம் தவறானது. வேலை நேரத்தின் அளவை விட, வேலையின் தரத்தில் தான் கவனம் செலுத்த வேண்டும். நாராயண மூர்த்தி மற்றும் பிறர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு . எனவே இதை நான் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.
ஆனால் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும், இந்த விவாதம் தவறான திசையில் இருப்பதாக நான் நினைக்கிறேன். 10 மணிநேரம் ஆனாலும் என்ன அவுட்புட் செய்கிறாய்? என்பது முக்கியம். 10 மணி நேரத்தில் உலகையே மாற்றிவிடலாம்.
பல நாடுகள் நான்கு நாள் வேலை வாரத்தை பரிசோதித்து வருகின்றன. படிக்கவும், சிந்திக்கவும் நேரம் தேவை. நீங்கள் வீட்டில் நேரத்தை செலவிடாமல், படிக்காமல், நண்பர்களுடன் நேரத்தை செலவிடாமல் அது சாத்தியமில்லை.

நம் தொழிலை எடுத்துக் கொள்வோம், நீங்கள் ஒரு காரை உருவாக்குங்கள். ஒரு காரில் ஒரு வாடிக்கையாளர் என்ன விரும்புகிறார் என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும்.
நாங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடாமல் எப்போதும் அலுவலகத்தில் இருந்தால், மற்ற குடும்பங்கள் என்ன வகையான காரில் உட்கார விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் எப்படி புரிந்துகொள்ள முடியும்? என்று கேள்வி எழுப்பிய ஆனந்த் மஹிந்திரா, உங்கள் ஜன்னல்களைத் திற, காற்றை உள்ளே விடுங்கள். நீங்கள் எப்போதும் சுரங்கப்பாதையில் இருக்க முடியாது என்ற காந்தியின் கூற்றை மேற்கோள் காட்டினார்.






