U19 ஆசிய கோப்பை- 90 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர் கொண்டது.பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
U19 ஆசிய கோப்பை- 90 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
Published on

19 வயதுக்குட்பட்ட வருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஆயுஸ்மாத்ரே தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 234 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை தோற்கடித்தது.

இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர் கொண்டது. மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி 16 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து இருந்தது. ஆயுஸ்மாத்ரே 38 ரன்னிலும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யவன்ஷி 5 ரன்னிலும், மல்கோத்ரா 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

தொடர்ந்து இந்த ஆட்டத்தின் முடிவில், 46.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 240 ரன்களை எடுத்தது. இதனால், 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

இதில், அதிகபட்சமாக ஹூசைபா அஹ்சான் 70 ரன்கள் குவித்தார். தொடர்ந்து, ஃபர்ஹான் யூசப் 23 ரன்களிலும், உஸ்மான் கான் 16 ரன்களிலும் ஆட்டத்தை இழந்தனர். தொடர்ந்து, அலி ராசா, சமீர் மின்ஹாஸ், அகமது ஹூசைன், ஹம்சா சாஹூர், அப்துல் சுபன், முகமது சய்யம், நிக்கப் சாஃபிக் உள்ளிட்டோர ஒற்றை இலக்கில் ஆவுட் ஆகினர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணி 41.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது. இதன்மூலம், பாகிஸ்தான் அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com