இந்தியன் வெல்ஸ் ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறிய எலினா, மேடிசன் கீஸ், சபலென்கா

முதல் அரையிறுதியில் மிர்ரா ஆண்ட்ரீவா மற்றும் இகா ஸ்வியாடெக் மோதுகின்றனர்.2-வது அரையிறுதியில் சபலென்கா மற்றும் கீஸ் மோதுகின்றனர்.
இந்தியன் வெல்ஸ் ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறிய எலினா, மேடிசன் கீஸ், சபலென்கா
Published on

வாஷிங்டன்:

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதனையடுத்து இன்று 3 காலிறுதி போட்டிகள் நடைபெற்றது. இதன் ஒரு போட்டியில் இதில் அரீனா சபலென்கா (பெலருசியா) சோனய் கர்தல் (பிரிட்டிஷ்) மோதினர். இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-2, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் சுவிஸ் வீராங்கனையான பெலிண்டா பென்சிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு கீஸ் தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷ்யா) மற்றும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்)ஆகியோர் மோதினர். இதில் உக்ரைன் வீராங்கனை எலினா 7-5, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

முதல் அரையிறுதியில் மிர்ரா ஆண்ட்ரீவா மற்றும் இகா ஸ்வியாடெக்கும் 2-வது அரையிறுதியில் சபலென்கா மற்றும் கீஸ் மோதுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com