

ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், ரஷியாவின் சாம்சோனோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய கோகோ காப் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் டயானா ஷ்னைடரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.