ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அரினா சபலென்கா

அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அரினா சபலென்கா- பாலா படோசா ஆகியோர் மோதினார்.இதில் 6-4, 6-2 என்ற கணக்கில் சபலென்கா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அரினா சபலென்கா
Published on

மெல்போர்ன்:

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்) - ஸ்பெயினின் பாலா படோசா உடன் மோதினார்.

இதில் 6-4, 6-2 என்ற கணக்கில் சபலென்கா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு அரையிறுதி போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கீஸ் போலந்தை சேர்ந்த இகா ஸ்வியாடெக் அணிகள் இன்று மோதவுள்ளனர். இதில் வெற்றி பெறும் வீராங்கனை நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்காவுடன் விளையாடுவார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com