

சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகர்-உருகுவேயின் ஏரியல் பெஹர் ஜோடி, நம்பர் 1 ஜோடியான இத்தாலியின் ஆண்ட்ரியா வவசோரி-சைமோன் பொலேலி ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய அனிருத் சந்திரசேகர் ஜோடி முதல் செட்டை 6-4 என கைப்பற்றியது. இதற்கு பதிலடியாக இத்தாலி ஜோடி 7-5 என வென்றது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை அனிருத் சந்திரசேகர் ஜோடி 11-9 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இதன்மூலம் நம்பர் 1 ஜோடியான இத்தாலியின் ஆண்ட்ரியா வவசோரி-சைமோன் பொலேலி ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.