மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க போட்டியை தவறவிடும் சூர்யா குமார் யாதவ்

டெல்லி அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சூர்ய குமார் யாதவ் இடபெறவில்லை.
சூர்ய குமார் யாதவ்
சூர்ய குமார் யாதவ்
Published on

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் 10 அணிகள் பங்கேற்கிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. இதனையடுத்து 27-ந் தேதி மும்பை அணி முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சூர்ய குமார் யாதவ் இடபெறவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் போது அவரது கட்டை விரலில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையாததால் முதல் போட்டியில் விளையாடவில்லை. தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் குணமடைய 10 முதல் 12 நாட்கள் ஆகும் என தேசிய கிரிக்கெட் அகாடமி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com