உலக கோப்பையில் அதிக விக்கெட் - சாதனையை சமன்செய்தார் இந்தியாவின் ஜுலான் கோ ஸ்வாமி

நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ஜுலான் கோ ஸ்வாமி
ஜுலான் கோ ஸ்வாமி
Published on

ஹாமில்டன்:

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 260 ரன்களை எடுத்தது. அமெலியா கெர் 50 ரன்னும், எமி சாட்டர்வெய்ட் 75 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய இந்தியா 198 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 62 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்திய வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி நேற்று ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் உலக கோப்பையில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை இவர் சமன் செய்தார்.

ஆஸ்திரேலியாவின் வின் புல்ஸ்டன் ஏற்கனவே உலக கோப்பையில் 39 விக்கெட் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com