ஆவேஷ்கானை ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

15-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் ஆவேஷ் கானை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
ஆவேஷ் கான்
ஆவேஷ் கான்
Published on

பெங்களூர்:

ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

2021-ம் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆவேஷ் கான் விளையாடி வந்தார். இவருக்கு இந்த ஐபிஎல் ஏலத்தில் கடும் போட்டி நிலவியது.

இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இவரை 10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com