மாநில குத்துச்சண்டை ரிதிஷ், மோனிஷ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

மாநிலம் முழுவதும் இருந்து 650 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.தெற்கு ரெயில்வே விளையாட்டு அதிகாரி வி.தேவராஜன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.
மாநில குத்துச்சண்டை ரிதிஷ், மோனிஷ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
Published on

தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் மாநில அளவிலான அழைப்பு குத்துச்சண்டை போட்டி சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமியில் நேற்று தொடங்கியது.

5 பிரிவுகளில் நடைபெறும் இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 650 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் வி.பாஸ்கரன், உலகக் கோப்பை குத்துச்சண்டையில் வெண்கலப்பதக்கம் வென்றரும், தெற்கு ரெயில்வே விளையாட்டு அதிகாரியுமான வி.தேவராஜன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

ஆண்களுக்கான சப்-ஜூனியர் பிரிவின் கால் இறுதியில் ரித்விக் (வி.எஸ்.பி.சி.), ரிதிஷ் (ராவணன்), மோனிஷ் (கே.எஸ்.பி.சி.), பிரதீஷ் (எலைட்) ஆகியோர் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர். நாளை வரை இந்தப் போட்டி நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com