

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் வரும் 31-ம் தேதி வரை நடக்கிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்வி-சிராக் ஷெட்டி ஜோடி, தென் கொரியாவின் சியோ செங் ஜே-கிம் வொன் ஹோ ஜோடி உடன் மோதியது.
இதில் அதிரடியாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-19, 21-18 என்ற செட் கணக்கில் வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.