

ஜெய்ப்பூர்:
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த போட்டியில் புனேரி பல்தான் - தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே புனேரி பல்தான் அணி சிறப்பாக விளையாடியது. இறுதியில் 39-33 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பல்தான் அணி அபார வெற்றி பெற்றது.
புனேரி பல்தான் அணி பெறும் 5-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் புனே அணி முதலிடத்துக்கு முன்னேறியது.