ரொனால்டோவை பற்றி மோசமாக பேச பணம் கொடுத்தார்கள் -ரொனால்டோவின் முன்னாள் காதலி பகீர்

ரொனால்டோவை பற்றி மோசமாக பேச பணம் கொடுத்தார்கள் -ரொனால்டோவின் முன்னாள் காதலி பகீர்

2007ம் ஆண்டு ரொனால்டோவை பிரிந்தபோது அவரைப் பற்றி எதிர்மறையாக பேச எனக்கு நிறைய பணம் கொடுத்தனர். ரொனால்டோ குறித்த எந்த எதிர்மறையான கருத்தையும் சொல்ல முடியவில்லை.
Published on

சென்னை:

போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டோ. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் பிரிட்டிஷ் நடிகையும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முன்னாள் காதலியுமான ஜெம்மா அட்கின்சன், ரொனால்டோவை பற்றி மோசமாக பேச தனக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறி உள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "2007ம் ஆண்டு ரொனால்டோவை பிரிந்தபோது அவரைப் பற்றி எதிர்மறையாக பேச எனக்கு நிறைய பணம் கொடுத்தனர். ஆனால் நான் அதை விரும்பவில்லை. ரொனால்டோ குறித்து எந்த எதிர்மறையான கருத்தையும் சொல்ல முடியவில்லை" என்றார்.

தற்போது ஜெம்மா அட்கின்சன், பிரபல நடனக் கலைஞர் கோர்கா மார்க்வெஸ் என்பவரை மணந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு மியா மற்றும் தியாகோ என இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com