பாரீஸ் ஒலிம்பிக்: குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரின் தோல்வி

துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.
Nikhat Zareen
Published on

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர்,சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவில் குத்துச்சண்டையில் இந்தியா சார்பில் நிகாத் ஜரின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் சீன வீராங்கனையை எதிர்கொண்டார்.

இதில் சீன வீராங்கனை 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் நிகாத் ஜரின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com