நீரஜ் சோப்ரா லெப்டினன்ட் கர்னலாக நியமனம்.. இந்திய ராணுவம் வழங்கிய கௌரவம்

இந்தியாவிற்கு சர்வதேச அங்கீகாரத்தைக் கொண்டு வந்தார்.2018 இல் அர்ஜுனா விருதும், 2021 இல் விசிஷ்ட சேவா பதக்கமும் வழங்கப்பட்டது.
நீரஜ் சோப்ரா லெப்டினன்ட் கர்னலாக  நியமனம்.. இந்திய ராணுவம் வழங்கிய கௌரவம்
Published on

இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரமும் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ராவுக்கு ஒரு அரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய பிராந்திய இராணுவம் அவருக்கு லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவப் பதவியை வழங்கியது. இந்த நியமனம் ஏப்ரல் 16 முதல் அமலுக்கு வந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நியமனம் குறித்த விவரங்கள் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான 'தி கெசட் ஆஃப் இந்தியா'வில் வெளியிடப்பட்டுள்ளன.

நீரஜ் சோப்ரா 2016 இல் இந்திய ராணுவத்தில் நைப் சுபேதார் என்ற பதவியதுடன் ஜூனியர் கமிஷன்டு அதிகாரியாக (JCO) சேர்ந்தார். ஈட்டி எறிதல் விளையாட்டில் தனது திறமையால் இந்தியாவிற்கு சர்வதேச அங்கீகாரத்தைக் கொண்டு வந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்துடன் அவர் வரலாறு படைத்தார்.

அவரது சேவைகளைப் பாராட்டி, அவருக்கு 2018 இல் அர்ஜுனா விருதும், 2021 இல் விசிஷ்ட சேவா பதக்கமும் வழங்கப்பட்டது. அதே ஆண்டில், சோப்ரா சுபேதாராக பதவி உயர்வு பெற்றார்.

2022 ஆம் ஆண்டு இந்திய ஆயுதப் படைகளின் மிக உயர்ந்த அமைதிக்கால பதக்கமான பரம் விஷிஷ்ட சேவா பதக்கத்தை பெற்ற அவர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சுபேதார் மேஜராக பதவி உயர்வு பெற்றார்.

தற்போது மீதும் அவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். அடுத்ததாக மே 23ல் போலந்தில் நடக்கவுள்ள 71வது ஆர்லன் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com