தேசிய சீனியர் தடகள போட்டி- தமிழக அணிக்கு 60 பேர் தேர்வு

தேசிய சீனியர் தடகள போட்டி ஓடிசா மாநிலம் புவனேஷ்வரில் நேற்று தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து 37 வீரர்களும், 23 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 60 பேர் பங்கேற்றுள்ளதாக தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.
தேசிய சீனியர் தடகள போட்டி- தமிழக அணிக்கு 60 பேர் தேர்வு
Published on

சென்னை:

62-வது தேசிய சீனியர் தடகள போட்டி ஓடிசா மாநிலம் புவனேஷ்வரில் நேற்று தொடங்கியது. 19-ந் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் இருந்து 37 வீரர்களும், 23 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 60 பேர் பங்கேற்றுள்ளதாக தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.

சிவக்குமார், இலக்கிய தாசன், சாய் சித்தார்த், தமிழரசன், விஷால், ஆரோக்கியராஜீவ், பிரதீப் , ஜெஸ்வின் ஆல்டிரின், பிரவீன் சித்ரவேல், முகமது சலாகுதீன் போன்ற முன்னனி வீரர்களும், அர்ச்சனா, கிரிதரணி, சுபா, வித்யா, நித்யா, திவ்யா, ரோசி, ஹேமமாலினி, தீபிகா போன்ற முன்னணி வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com