தேசிய பெடரேசன் கோப்பை தடகளம்- சாதனை படைத்த ஆந்திர வீராங்கனை

பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஆந்திர வீராங்கனை ஜோதி புதிய சாதனை படைத்ததோடு தங்கப்பதக்கம் பெற்றார். 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வெள்ளி பதக்கம் வென்றார்.
தேசிய பெடரேசன் கோப்பை தடகளம்- சாதனை படைத்த ஆந்திர வீராங்கனை
Published on

ராஞ்சி:

26-வது தேசிய பெடரேசன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.

பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஆந்திர வீராங்கனை ஜோதி புதிய சாதனை படைத்ததோடு தங்கப்பதக்கம் பெற்றார்.

அவர் பந்தய தூரத்தை 12.89 வினாடியில் கடந்தார். இதற்கு முன்பு அவர் 13.43 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. தனது சாதனையை முறியடித்து ஜோதி புதிய சாதனை நிகழ்த்தினார்.

தமிழக வீராங்கனை நித்யா 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். அவர் பந்தய தூரத்தை 13.44 வினாடியில் கடந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சப்னாகுமாரி 13.58 வினாடி யில் கடந்த வெண்கல பதக்கம் வென்றார்.

வட்டு எறியும் போட்டியில் மத்திய பிரதேச வீராங்கனை ஷாலினி சவுத்ரி தங்கம் வென்றார்.

ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் மராட்டியத்தை சேர்ந்த தேஜஸ் அசோக்கும், சங்கிலி குண்டு எறிதல் பஞ்சாப்பை சேர்ந்த தம்ஜீத் சிங்கும் தங்கம் வென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com