பயிற்சியாளர், பிசியோவுடன் ஐரோப்பியாவில் பயிற்சி: நீரஜ் சோப்ராவுக்கு அமைச்சகம் அனுமதி

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார்.பாரிஸ் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயிற்சியாளர், பிசியோவுடன் ஐரோப்பியாவில் பயிற்சி: நீரஜ் சோப்ராவுக்கு அமைச்சகம் அனுமதி
Published on

இந்தியாவின் முன்னணி தடகள வீரர் நீரஜ் சோப்ரா. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். மேலும், உலக சாம்பியன் போட்டியில் சாதனைப் படைத்துள்ளார்.

பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் சாதனைப் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்படுவதற்காக ஐரோப்பியாவில் தனது பயிற்சியாளர் மற்றும் பிசியோவுடன் சென்று பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்டு இருந்தார். இந்த நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சகம் நீரஜ் சோப்ரா வெளிநாட்டில் சென்று பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் மே 29-ந்தேதியில் இருந்து ஜூலை 28-ந்தேதி வரை ஐரோப்பியாவில் உள்ள பல்வேறு இடங்களில் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்காக TOPS என்ற திட்டம் இந்தியாவில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நீர்ஜ் சோப்ராவின் பயிற்சிக்காக தொகை வழங்கப்படும்.

நீரஜ் சோப்ராவை போன்று பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற சில வீரர்கள் வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்வதற்காக உதவிகள் கேட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com