தைபே ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் தோல்வி

தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.
kiran george
Published on

தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானின் தைபேயில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், ஜப்பானின் யுடாய் ஒகிமோடோ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய யுடாய் ஒகிமோடோ 21-12, 21-10 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

ஏற்கனவே இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தருண் மன்னேபள்ளி ஆகியோரும் தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com