கேப்டன் டூ பிளசிஸ் அசத்தல்... பஞ்சாப் அணிக்கு 206 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூர்

அதிரடியாக ஆடிய கேப்டன் டூ பிளசிஸ், 57 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்சர் உள்பட 88 ரன்கள் விளாசினார்.
டூ பிளசிஸ்
டூ பிளசிஸ்
Published on

மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 3வது லீக் ஆட்டம், மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,  பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.

அதிரடியாக ஆடிய கேப்டன் டூ பிளசிஸ், 57 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்சர் உள்பட 88 ரன்கள் விளாசினார். விராட் கோலி 41 ரன்கள் அடித்தார்.

பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், ராகுல் சாகர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com