உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனை ஜாஸ்மின் கால்இறுதிக்கு முன்னேற்றம்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரில் நடைபெற்று வருகிறது. கால்இறுதியில் உஸ்பெகிஸ்தானின் குமோரபோனு மாமஜோனோவாவுடன் அவர் மோதுகிறார்.
உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனை ஜாஸ்மின் கால்இறுதிக்கு முன்னேற்றம்
Published on

லிவர்பூல்:

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா 5-0 என்ற கணக்கில் பிரேசிலின் ஜூஸ்லின் ரோமியுவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றாா். கால்இறுதியில் உஸ்பெகிஸ்தானின் குமோரபோனு மாமஜோனோவாவுடன் அவர் மோதுகிறார்.

மற்ற பிரிவுகளில் இந்திய வீராங்கனைகள் சனமச்சா சானு (70 கிலோ), சாக்ஷி சவுத்ரி (54 கிலோ) ஆகியோர் தோற்று வெளியேறினர்.

ஆண்களுக்கான 2-வது சுற்றில் 65 கிலோ பிரிவில் இந்தியாவின் அபினாஷ் ஜாம்வால் 5-0 என மெக்சிகோவின் ஹியுகோ பேர்ரனை வீழ்த்தினாா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com