

சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, இந்தோனேசியாவின் குசுமா- பிஸ்பிதா சாரி ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இந்தோனேசிய ஜோடி 21-10, 21-14 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
இதன்மூலம் ஜாலி-கோபிசந்த் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.