

உலக கோப்பை கால்பந்து தொடர் அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. இதில் 48 அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. பிரேசில் அணி ஜூன் 13-ந்தேதி முதல் போட்டியில் மொராக்கோவை எதிர்த்து விளையாட இருக்கிறது.
தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. நாளை நட்பு ரீதியிலான போட்டியில் எகிப்து அணியை எதிர்த்து பிரேசில் விளையாட இருக்கிறது. இதில் முன்னணி வீரரான நெய்மர் விளையாடவில்லை. கடந்த 27-ந்தேதியின் போது பயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு calf strain ஏற்பட்டுள்ளது. காயத்தின் வீரியம் கிரேடு-2 ஆக இருப்பதால் இரண்டு முதல் மூன்று வாரங்கள் விளையாடாமல் இருக்க வேண்டும்.
வரும் திங்கட்கிழமை நெய்மருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்யப்படும். அதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று உறுதியானால் ஜூன் மாதம் 13-ந்தேதி மொராக்கோ அணிக்கெதிராக பங்கேற்பார். இல்லையென்றால், ஜூன் 18-ந்தேதி ஹெய்தி அணிக்கெதிராக விளையாடலாம் என பிரேசில் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டு, அவரது கால்பந்து வாழ்க்கைக்கு மிகப்பெரிய சோதனையாக அமைந்து வருகிறது.