5 குழந்தைகளுக்கு அப்பாவான பிறகு காதலியை கரம்பிடிக்கும் ரொனால்டோ: திருமணம் எப்போது தெரியுமா?

2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் ரொனால்டோ பழக தொடங்கினார்ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் - ரொனால்டோ ஜோடிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
5 குழந்தைகளுக்கு அப்பாவான பிறகு காதலியை கரம்பிடிக்கும் ரொனால்டோ: திருமணம் எப்போது தெரியுமா?
Published on

போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40) கால்பந்து மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் நிலையில், விளம்பரம் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

இவர் 2015-ம் ஆண்டு வரை இரினா ஷாய்க் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். இரினாவுடனான ஐந்து வருட தொடர்பை முறித்துக் கொண்ட பின் அதன்பின், 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் பழக தொடங்கினார். தற்போது வரை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடன் தான் ரொனால்டோ வாழ்ந்து வருகிறார்.

திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் ரொனால்டோ - ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், தனது நீண்டநாள் காதலி ஜார்ஜினாவை கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமணம் செய்துகொள்ளவுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் மோதிரம் மாற்றும் நிச்சயம் செய்துகொண்டனர்.

2026 கால்பந்து உலக கோப்பை தொடர் முடிந்ததும் கோப்பையுடன் தனது காதலி ஜார்ஜினாவை திருமணம் செய்யவுள்ளதாக ரொனால்டோ அறிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com