ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 127-ல் சுருண்டது ஆப்கானிஸ்தான்

குர்பாஸ் அதிகபட்சமாக 37 ரன்கள் சேர்த்தார்.ஜிம்பாப்வே வீரர் பிராட் எவன்ஸ் 5 விக்கெட் சாய்த்தார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 127-ல் சுருண்டது ஆப்கானிஸ்தான்
Published on

ஜிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஹராரேயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் ஜிம்பாப்வேயின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 127 ரன்களில் சுரண்டது. தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரன் 19 ரண்களும் அப்துல் மாலிக் 30 ரன்களும் அடித்தனர். அதன்பின் வந்த குர்பாஸ் 37 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

ஜிம்பாப்வே அணியின் பிராட் எவன்ஸ் ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார். முசாரபானி 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் ஜிம்பாவே அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 9 ரன்கள் எடுப்பதற்குள் பிரையன் பென்னெட்டை இழந்தது. அவர் 6 ரன்களில் ஷியாவுர் ரகுமான் பந்தில் ஆட்டம் இழந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com