2016-க்கு பிறகு டி20 தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது- ரோவ்மன் பவல்

எங்கள் பந்துவீச்சாளர்களை ஒரு ஓவர் ஸ்பெல்லை மட்டும் வீசுவதற்காகவே திட்டமிட்டு அழைத்தோம். அதேபோல் விரிஸ்ட் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள, நல்ல இடதுகை பேட்ஸ்மேன்கள் அவசியம்.
2016-க்கு பிறகு டி20 தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது- ரோவ்மன் பவல்
Published on

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி சொதப்பலான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதலில் தடுமாற்றத்தை கொடுத்த இந்திய அணி பூரனின் அதிரடியை சமாளிக்க முடியாமல் ரன்களை வாரி வழங்கியது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த டி20 தொடரை வெல்வதற்கான சிறந்த இடத்தில் இருக்கிறோம் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கூறியுள்ளார்.

இந்த வெற்றிக் குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் கூறுகையில்:-

2016-ம் ஆண்டுக்கு பின் நாங்கள் டி20 தொடரில் வெற்றிபெறவில்லை. அதனால் இந்த டி20 தொடரை வெல்வதற்கான சிறந்த இடத்தில் இருக்கிறோம்.

எங்கள் பந்துவீச்சாளர்களை ஒரு ஓவர் ஸ்பெல்லை மட்டும் வீசுவதற்காகவே திட்டமிட்டு அழைத்தோம். அதற்கு கடுமையான வெயில் தான் காரணம். அதேபோல் விரிஸ்ட் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள, நல்ல இடதுகை பேட்ஸ்மேன்கள் அவசியம். சாஹல், குல்தீப் மற்றும் பிஷ்னோய் ஆகியோரை கட்டுப்படுத்த எங்களுக்கு இடது கை வீரர்கள் தேவை. பூரனும் ஹெட்மேயரும் அதை எதிர்கொள்வது முக்கியம். அதனை களத்தில் செயல்படுத்தினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com