அடுத்த டெஸ்ட் கேப்டனாக அவதாரம் எடுக்கும் சுப்மன் கில்?..

பும்ரா அடிக்கடி காயம் அடைவதால், அவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ தயக்கம் காட்டுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
அடுத்த டெஸ்ட் கேப்டனாக அவதாரம் எடுக்கும் சுப்மன் கில்?..
Published on

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில் புதிய டெஸ்ட் கேப்டனைத் தேர்ந்தெடுப்பதற்கான பொறுப்பு பிசிசிஐ தலையில் விழுந்துள்ளது.

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அடுத்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் மட்டுமல்லாமல் நீண்ட காலத்திற்கு அணியை வழிநடத்தக்கூடிய கேப்டனை தேடி வருகிறது. அந்த வகையில் சுப்மன் கில் அடுத்த டெஸ்ட் கேப்டன் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிகின்றன.

பும்ரா அடிக்கடி காயம் அடைவதால், அவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ தயக்கம் காட்டுகிறது.

 இதற்கிடையே நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் விளையாடியுள்ளார்.

எனவே ஜூன் 20 ஆம் தேதி ஹெடிங்லியில் தொடங்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முதல் அவரை கேப்டனாக்க பிசிசிஐ முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com