சமர் ஜோசப்புக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கொடுத்த அங்கீகாரம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் சமர் ஜோசப்பின் சிறப்பான பந்து வீச்சால் சமநிலையில் முடிந்தது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சமர் ஜோசப் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சமர் ஜோசப்புக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கொடுத்த அங்கீகாரம்
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணி 3 வடிவிளான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதலில் நடந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அடுத்து நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் சமர் ஜோசப்பின் அபார பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்த சமர் ஜோசப்பின் உரிமை ஒப்பந்தத்தை தற்போது வெஸ்ட் இண்டீஸ் வாரியம் சர்வதேச ரிட்டைனர் ஒப்பந்தமாக மேம்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் காரணமாக சர்வதேச அளவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு கிடைக்கும் அதிகபட்ச சம்பளம் சமர் ஜோசப்புக்கும் கிடைக்கும்.

அத்துடன் இந்த ஒப்பந்தத்தால் வரும் காலங்களில் வெஸ்ட் இண்டீஸ்க்காக நிறைய போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பும் அவருக்கு கிடைக்கும். அதே போல 2024 டி20 உலகக் கோப்பையில் அவருடன் சேர்ந்து வேலை செய்ய உள்ளதாக பயிற்சியாளர் டேரன் சமி அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com