ஆட்ட நாயகன் விருதுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் விராட் கோலி

விராட் கோலி 59 பந்தில் 76 ரன்கள் அடித்தார்.ஆறு போட்டிகளில் அரைசதம் கூட அடிக்காமல் இருந்தார்.
ஆட்ட நாயகன் விருதுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் விராட் கோலி
Published on

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணி 176 ரன்கள் அடிக்க விராட் கோலி முக்கிய காரணமாக இருந்தார். அவர் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஒரு பக்கம் நிலையாக நின்று விளையாடினார். இதற்கு முன்னதாக இந்த தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது இந்திய அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவாக இருந்தது. விராட் கோலி ஒட்டுமொத்த திறமையையும் இறுதிப் போட்டியில் வெளிப்படுத்துவார என நம்பிக்கை தெரிவித்தார். அதேபோல் நிரூபித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

அத்துடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இது என்னுடைய கடைசி டி20 உலகக் கோப்பை. நாங்கள் விரும்பியதை எட்டினோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com