டி20 தொடரை அமெரிக்கா வென்ற நிலையில் கடைசி போட்டியில் வங்கதேசம் ஆறுதல் வெற்றி

வங்கதேசம் - அமெரிக்கா இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 சீரிஸ் போட்டிகள் அமெரிக்காவில் தற்போது நடந்துவருகிறது.சிறப்பாக பந்துவீசிய முஸ்தபிசுர் ரஹ்மான் 10 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
டி20 தொடரை அமெரிக்கா வென்ற நிலையில் கடைசி போட்டியில் வங்கதேசம் ஆறுதல் வெற்றி
Published on

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஒருங்கிணைக்கும் டி- 20 உலகக் கோப்பை 2024 சீரிஸ் வரும் ஜூன் 2 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் வங்கதேசம் - அமெரிக்கா இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 சீரிஸ் போட்டிகள் அமெரிக்காவில் தற்போது நடந்துவருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளில் அமெரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், 3 ஆவது போட்டி ப்ரேரி வியூ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் அடித்தது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முஸ்தபிசுர் ரஹ்மான் 10 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். டி20 போட்டியில் அவரது சிறந்த பந்துவீச்சு இதுவாகும்.

பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 11.4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 108 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. தன்சித் ஹசன் 58 ரன்களும் சவுமியா சர்க்கார் 43 ரன்களும் அடித்து அட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் அமெரிக்கா கைப்பற்றியது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com