ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம்: முதல் இன்னிங்சில் மும்பை 374 ரன்னில் ஆல் அவுட்

முதல் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக விளையாடிய சர்ப்ராஸ் கான் 134 ரன்கள் குவித்தார்.
சர்ப்ராஸ் கான்
சர்ப்ராஸ் கான்
Published on

87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் மும்பையும், மத்தியபிரதேசமும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் சாம்பியன் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. சர்ப்ராஸ் கான் 40 ரன்னுடனும், ஷம்ஸ் முலானி 12 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது.

சிறப்பாக விளையாடிய சர்ப்ராஸ் கான் 134 ரன்கள் குவித்தார். சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 374 ரன்கள் எடுத்தது. மத்திய பிரதேசம் தரப்பில் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com