

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 1 டெஸ்ட் மற்றும் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் டெஸ்ட் போட்டி ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது. அடுத்தப்படியாக டி20 அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் விலகியுள்ளார்.
சுழற்பந்து வீச்சாளரான ஆதில் ரஷீத் ஒரு மூஸ்லிம் ஆவார். அவர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதால் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்தார். ரஷீத் விளையாடத நிலையில் மாட் பார்கின்சன் இந்தியாவுக்கு எதிரான ஒயிட்பால் தொடரில் விளையாடும் வாய்ப்பைப் பெறுவார்.