பயிற்சி ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 240 ரன்கள் குவிப்பு

இஷான் கிஷன் 20 பந்தில் 53 ரன்கள் அடித்தார்.திலக் வர்மா 19 பந்தில் 45 ரன்கள் விளாசினார்.
பயிற்சி ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 240 ரன்கள் குவிப்பு
Published on

டி20 உலகக் கோப்பை வருகிற 7-ந்தேதி தொடங்க இருக்கும் நிலையில் இன்று இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான பயிற்சி ஆட்டம் நவி மும்பையில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், அபிஷேக் சர்மா இறங்கினர். இஷான் கிஷன் 20 பந்தில் 53 ரன்களும், அபிஷேக் சர்மா 18 பந்தில் 24 ரன்களும் எடுத்து ரிட்டையர்டு அவுட் முறையில் வெளியேறினர்.

அடுத்து வந்த திலக் வர்மா அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 19 பந்தில் 45 ரன்கள் விளாசி தனது உடற்தகுதியை நிரூபித்தார். இவர் காயம் காரணமாக சில தொடர்களை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் சூர்யகுமார் யாதவ் 16 பந்தில் 30 ரன்களும், ரிங்கி சிங் 13 பந்தில் 16 ரன்களும் எடுத்து வெளியேறினர். ஹர்திக் பாண்ட்யா 10 பந்தில் 30 ரன்களும், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 35 ரன்களும் அடிக்க இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com