அரையிறுதிக்கு முன்னேறுவது யார்? இந்தியா பந்துவீச்சு தேர்வு

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் கடைசி போட்டி இது.இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அரையிறுதிக்கு முன்னேறுவது யார்? இந்தியா பந்துவீச்சு தேர்வு
Published on

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. இன்று (மார்ச். 1) இரவு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் கடைசி போட்டி இது ஆகும்.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா என மூன்று அணிகள் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில், நான்காவது அணியாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறப்போவது யார் என்ற நிலையில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் களமிறங்கியுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com