'எல்லா புகழும் இறைவனுக்கே': கேப்டன் பொறுப்பு குறித்து மனம்திறந்து பேசிய சூரியகுமார் யாதவ்

நாட்டுக்காக விளையாடுவது ஒரு சிறந்த உணர்வு, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.இந்த புதிய பதவி பல பொறுப்புகளையும், உற்சாகத்தையும் கொண்டுவந்துள்ளது.
'எல்லா புகழும் இறைவனுக்கே': கேப்டன் பொறுப்பு குறித்து மனம்திறந்து பேசிய சூரியகுமார் யாதவ்
Published on

இந்திய அணி டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை செல்ல உள்ளது. இதில் முதலில் தொடங்கும் முதல் டி20 போட்டி 27-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இருந்துதான் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.

இந்நிலையில் இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கேப்டன் பொறுப்பை குறித்து சூரியகுமார் யாதவ் மனம் திறந்துள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் பொறுப்பை ஏற்கும் என் மீது அன்பையும், ஆதரவையும் பொழிந்த அனைவருக்கும் நன்றி.

கடந்த வாரங்களில் நடந்தது கனவுபோல் இருக்கிறது. நாட்டுக்காக விளையாடுவது ஒரு சிறந்த உணர்வு, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

இந்த புதிய பதவி பல பொறுப்புகளையும், உற்சாகத்தையும் கொண்டுவந்துள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com