3வது போட்டி மழையால் ரத்து: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை

டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 21 ஓவரில் 112 ரன்கள் எடுத்த போது மழை பெய்தது.
3வது போட்டி மழையால் ரத்து: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை
Published on

பல்லெகலே:

நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் இலங்கை 2-0 என கைப்பற்றி இருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. அந்த அணி 21 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் வில் யங் அரை சதம் கடந்து 56 ரன்னும், ஹென்ரி நிகோலஸ் 46 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

அப்போது திடீரென மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை 2-0 என கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com