பதும் நிசங்கா அசத்தல் சதம்: 2வது ஒருநாள் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இலங்கை

முதலில் ஆடிய வங்காளதேசம் 286 ரன்கள் எடுத்துள்ளது.அடுத்து ஆடிய இலங்கை 287 ரன்களை எடுத்து வென்றது.
பதும் நிசங்கா அசத்தல் சதம்: 2வது ஒருநாள் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இலங்கை
Published on

சட்டோகிராம்:

இலங்கை, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேசம் 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது. ஹிருடோய் 96 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். சவுமியா சர்க்கார் 68 ரன்னும், ஷாண்டோ 40 ரன்னும் எடுத்தனர்.

இலங்கை சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், மதுஷனகா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ டக் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 16 ரன்னும், சமரவிக்ரமா ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட்கள் விழுந்தாலும் பொறுப்புடன் ஆடிய பதும் நிசங்கா சதமடித்து அசத்தினார். அவருக்கு அசலங்கா நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. அசலங்கா அரை சதம் கடந்தார்.

4வது விக்கெட்டுக்கு 185 ரன்கள் சேர்த்த நிலையில் பதும் நிசங்கா 114 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசலங்கா 91 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், இலங்கை 47.1 ஓவரில் 287 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com