ஆப்கானிஸ்தானுக்கு 242 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை

இலங்கை அணியின் பதும் நிசங்கா 46 ரன்களை குவித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் பசல்ஹக் பாரூக்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆப்கானிஸ்தானுக்கு 242 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை
Published on

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 30-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. பூனேவில் நடைபெறும் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது.

அதன்படி இலங்கை அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய நிசங்கா மற்றும் கருணரத்னே முறையே 46 மற்றும் 15 ரன்களை எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த கேப்டன் குசல் மெண்டிஸ் 39 ரன்களையும், சதீர சமரவிக்ரம 36 ரன்களையும் எடுத்தனர். சரித் அசலங்கா 14 ரன்களையும், மேத்யூஸ் 23 ரன்களிலும், சமீரா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய தீக்ஷனா பொறுப்பாக ஆடி 29 ரன்களை எடுத்தார். போட்டி முடிவில் இலங்கை அணி 241 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பாரூக்கி 4 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரகுமான்  2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரஷித் கான், அப்துல்லா ஒமர்சாய் மற்றும் நவீன் உல் ஹக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com