2-வது ஒருநாள் போட்டி: 107 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா- தொடரை கைப்பற்றி இலங்கை அசத்தல்

ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக ஸ்மித் 29, ஜோஸ் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லலகே 4 விக்கெட்டும் அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
2-வது ஒருநாள் போட்டி: 107 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா- தொடரை கைப்பற்றி இலங்கை அசத்தல்
Published on

இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 281 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக குசல் மெண்டீஸ் 101, அசலங்கா 78, நிஷான் மதுஷ்கா 51 ரன்கள் எடுத்தனர்.

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ ஷாட், டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி திணறியது.

மேத்யூ ஷாட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் 9 ரன்னில் ஹெட் 18 ரன்னிலும் வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதனை தொடர்ந்து கேப்டன் ஸ்மித் விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்கிலிஸ் பொறுப்புடன் விளையாடினர். ஜோஸ் 22 ரன்களிலும் ஸ்மித் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 24.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை 2 -0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லலகே 4 விக்கெட்டும் அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com