பெண்கள் கிரிக்கெட்டில் அதிக சதம்: மிதாலி ராஜ் சாதனையை சமன் செய்த ஸ்மிரிதி மந்தனா

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசினார்.மிதாலி ராஜ் 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஏழு சதம், 64 அரைசதங்கள் அடித்துள்ளார்.
பெண்கள் கிரிக்கெட்டில் அதிக சதம்: மிதாலி ராஜ் சாதனையை சமன் செய்த ஸ்மிரிதி மந்தனா
Published on

இந்தியா- தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா சதம் விளாசினார். இது அவரின் 6-வது ஒருநாள் சதம் ஆகும்.

இந்த நிலையில் இன்று 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியிலும் சதம் விளாசினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் விளாசிய இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் சாதனையை சமன் செய்துள்ளார்.

மிதாலி ராஜ் 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஏழு சதம், 64 அரைசதங்கள் அடித்துள்ளார். 27 வயதான ஸ்மிரிதி மந்தனா 84 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் ஏழு சதங்கள் அடித்துள்ளார். இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டனான ஸ்மிரிதி மந்தனா 27 அரைசதங்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com