இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக ஜெயசூர்யா முடிவு

ஜெயசூர்யா இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு பிறகு ஜெயசூர்யா இதை அறிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக ஜெயசூர்யா முடிவு
Published on

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான ஜெயசூர்யா அந்நாட்டு அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக முடிவு செய்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு பிறகு ஜெயசூர்யா இதை அறிவித்தார்.

இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அவர் உலக கோப்பைக்காக முழு நேர பயிற்சியாளர் ஆனார். அவரது பயிற்சியில் இந்தியா, நியூசிலாந்து தொடரை இலங்கை கைப்பற்றியது. தற்போது உலக கோப்பையில் ஏற்பட்ட மோசமான தோல்வியால் ஜெயசூர்யா பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக திட்டமிட்டுள்ளார். இந்த முடிவை அவர் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இன்னும் தெரிவிக்கவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com