வருந்தத்தக்கது: இந்திய போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தது குறித்து அப்ரிடி கருத்து

இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணித்துள்ளது பாகிஸ்தான்.பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஐசிசி கடும் அபராதம் விதிக்கும் என எதிர்பார்ப்பு.
வருந்தத்தக்கது: இந்திய போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தது குறித்து அப்ரிடி கருத்து
Published on

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது. போட்டியை புறக்கணிப்போம் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் முடிவு குறித்து ஷாஹித் அப்ரிடி கூறியதாவது:-

அரசியல் அதன் கதவை மூடும்போது, கிரிக்கெட் கதவு திறக்கப்படும் என்று நான் எப்போதுமே நம்புவேன். இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடாது என்பது வருந்ததக்கது. ஆனால், என்னுடைய அரசின் முடிவின் பின்னால் நான் நிற்கிறேன்.

இது ஐசிசி-க்கு அறிக்கை மூலம் அல்லாமல் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பாரபட்சம் இல்லாமல், சுதந்திரமான நியாயமான முடிவுகள் எடுப்பதை நிரூபனம் செய்யக்கூடிய நிலை.

இவ்வாறு அப்ரிடி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com