ஆஷஸ் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் விலகல்

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஆஷஸ் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் விலகல்
Published on

லீட்ஸ்:

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. பர்மிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், லார்ட்ஸ் அந்த அணி மைதானத்தில் நடந்த 2-வது போட்டியில் 43 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை ( 6-ந் தேதி) தொடங்குகிறது. 

இந்நிலையில் தோள்பட்டை காயம் காரணமாக ஆஷஸ் தொடரின் எஞ்சிய 3 போட்டிகளில் இருந்து இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஓல்லி போப் விலகியுள்ளார். ஏற்கனவே முதல் இரு டெஸ்டில் தோற்ற நிலையில் இவரது விலகல் இங்கிலாந்துக்கு மேலும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.

இதேபோல ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பந்து வீச்சாளர் நாதன் லயன் ஏற்கனவே மீதமுள்ள 3 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com