ரஹேஜா, ராதாகிருஷ்ணன் அதிரடி: 189 ரன்களை குவித்தது திருப்பூர்

டாஸ் வென்ற நெல்லை பவுலிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய திருப்பூர் அணி 189 ரன்களை குவித்தது.
Radhakrishnan
Published on

நெல்லை:

டி.என்.பி.எல். தொடரின் லீக் ஆட்டங்கள் நெல்லையில் நடந்து வருகின்றன. இன்று நடைபெறும் 23வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, திருப்பூர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக் முதல் பந்தில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

துஷார் ரஹேஜாவுடன் ராதாகிருஷ்ணன் இணைந்தார். இந்த ஜோடி ஆரம்பமே அதிரடியில் இறங்கியது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். இதனால் பவர் பிளேயில் திருப்பூர் அணி 77 ரன்களை சேர்த்தது.

ரஹேஜா 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 13 பந்தில் 41 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய ராதாகிருஷ்ணன் அரை சதம் எடுத்து 50 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கணேஷ், முகமது அலி 50க்கு மேற்பட்ட ரன்களைச் சேர்த்தனர். முகமது அலி 35 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 189 ரன்களைக் குவித்துள்ளது.

இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com