பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை.. கேரி கிர்ஸ்டன் ஓபன் டாக்

நான் பல அணியுடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் இது போன்ற சூழ்நிலையை பார்த்ததில்லை.
பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை.. கேரி கிர்ஸ்டன் ஓபன் டாக்
Published on

புளோரிடா:

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் அணியானது 2 வெற்றிகள் மட்டுமே பெற்ற நிலையில் லீக் சுற்றுடன் வெளியேறியது.

முதலாவது ஆட்டத்தில் அமெரிக்காவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், 2-வது ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது. இதனால் கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னெற முடியவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தான் அனியில் ஒற்றுமை இல்லை என அந்த அணியின் பயிற்சியாளரான கேரி கிர்ஸ்டன் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை. அவர்கள் அதை ஒரு அணி என்று அழைக்கிறார்கள். ஆனால் அது ஒரு அணி அல்ல. அவர்கள் ஒருவரையொருவர் ஆதரிக்கவில்லை. அனைவரும் இடது மற்றும் வலது என பிரிக்கப்பட்டுள்ளனர். நான் பல அணியுடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் இது போன்ற சூழ்நிலையை பார்த்ததில்லை.

நாம் சிறந்தவர்களுடன் போட்டியிட விரும்பினால், நாம் நமது உடற்தகுதி மற்றும் திறன்களை மேம்படுத்தி ஒற்றுமையாக இருக்க வேண்டும். உடற்தகுதி அடிப்படையில் நாங்கள் மிகவும் பின்தங்கியுள்ளோம். தங்கள் உடற்தகுதியை மேம்படுத்த விரும்பும் வீரர்கள் மட்டுமே அணியில் இருப்பார்கள்.

இவ்வாறு கேரி கிர்ஸ்டன் கூறினார்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com