முதன்முறையாக ரஞ்சி டிராபியை வென்று வரலாற்று சாதனைப் படைத்தது ஜம்மு-காஷ்மீர் அணி

முதல் இன்னிங்சில் ஜம்மு-காஷ்மீர் 584 ரன்கள் குவித்தது.கர்நாடகா அணியால் 293 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
முதன்முறையாக ரஞ்சி டிராபியை வென்று வரலாற்று சாதனைப் படைத்தது ஜம்மு-காஷ்மீர் அணி
Published on

ரஞ்சி கோப்பை பைனல் கர்நாடகா- ஜம்மு-காஷ்மீர் இடையே ஹூப்ளியில் நடைபெற்றது. கடந்த 24-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு-காஷ்மீர் பேட்டிங் தேர்வு செய்தது.

ஷுபம் பண்டிர் (121), யாவெர் ஹசன் (88), பராஸ் டோக்ரா (70), அப்துல் சமாத் (61), கணையா வதாமேன் (70), சஹில் லோத்ரா (72) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் ஜம்மு-காஷ்மீர் 584 ரன்கள் குவித்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய கர்நாடகாவை 293 ரன்னில் சுருட்டியது. மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 160 ரன்கள் சேர்த்தார். ஜம்மு-காஷ்மீர் அணியின் அகிப் நபி 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

291 ரன்கள் முன்னிலையுடன் ஜம்மு-காஷ்மீர் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் தொடக்க வீரர் இக்பால் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் அடிக்க, ஜம்மு-காஷ்மீர் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்தது.

477 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இன்று கடைசி ஆட்டத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்தது. இக்பால் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். மற்றொரு முனையில் சஹில் லோத்ராவும் சதம் விளாசினார். 4 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் தனது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இக்பால் 160 ரன்களுடனும், லோத்ரா 101 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மொத்தமாக 633 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்த நிலையில், 634 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த ஸ்கோரை கர்நாடகா அணியால் எட்டுவது மிகவும் கடினம். எனவே, போட்டியை அத்துடன் முடித்துக் கொள்ள இரு அணி கேப்டன்களும் முடிவு செய்தனர். இதனால் போட்டி டிராவில் முடிந்தது.

முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரஞ்சி டிராபி வரலாற்றில் முதன்முறையாக ஜம்மு-காஷ்மீர் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com