எனது 800 விக்கெட் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது- முரளிதரன் விளக்கம்

ஒவ்வொரு நாடும் ஆண்டுக்கு 6 முதல் 7 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடுகின்றன. 20 ஓவர் போட்டிக்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
எனது 800 விக்கெட் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது- முரளிதரன் விளக்கம்
Published on

கொழும்பு:

டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றியவர் முத்தையா முரளிதரன்.இலங்கையை சேர்ந்த சுழற்பந்து வீரரான அவர் 133 டெஸ்டில் விளையாடி 800 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

அவருக்கு அடுத்தப்படியாக வார்னே (ஆஸ்திரேலியா) 708 விக்கெட், ஆண்டர்சன் (இங்கிலாந்து) 704 விக்கெட்டும், கும்ப்ளே (இந்தியா) 619 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

தற்போதுள்ள வீரர்களில் 36 வயதான நாதன்லயன் (ஆஸ்திரேலியா) 530 விக்கெட்டும், தமிழகத்தை சேர்ந்த வீரர் 37 வயதான ஆர்.அஸ்வின் 516 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில் எனது 800 விக்கெட் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று முரளிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

டெஸ்ட் போட்டி பற்றி நான் கவலைப்படுகிறேன். ஒவ்வொரு நாடும் ஆண்டுக்கு 6 முதல் 7 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடுகின்றன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடலாம். ஆனால் மற்ற நாடுகளில் இருக்கும் ரசிகர்கள் அதை அதிகம் விரும்பி பார்ப்பதில்லை. இதனால் டெஸ்ட் போட்டிகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது.

எனது 800 விக்கெட் சாதனையை யாராலும் முறியடிக்க இயலாது. மிகவும் கடினமானது. ஏனென்றால் 20 ஓவர் போட்டிக்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும் நாங்கள் 20 ஆண்டுகளாக விளையாடினோம். ஆனால் தற்போது விளையாடும் ஆண்டு மிகவும் குறைந்துள்ளது.

இவ்வாறு முரளிதரன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com